தனிமை..
தனிமை..
கண்ணுக்கெட்டிய தூரம்வரை
யாருமில்லை
நான் யார்?
அவசியமில்லாமல் போகிறது
முதன்முதலாக
நூற்றாண்டுகளின்
ஏக்கத்தோடு காத்திருக்கிறேன்
இந்த மழைக்காக
அறிந்தோ அறியாமலோ
படிந்து போன
நூற்றாண்டுகளின் கரையை
கழுவதற்காக
காத்திருக்கிறேன்
எப்போது நிகழ்ந்திருக்கும்?
வெற்றிக்காண காரணம் என்ன?
இன்று வரை அறியமுடியவில்லை
பண்பாட்டின் மீதான
படையெடுப்பு
ஆணாதிக்கத்தின்
அந்த வெற்றியில்தான்
நாட்டப்பட்டிருக்க வேண்டும்
கற்பின் கொடிகம்பம்
யோனியில்
தன் இருப்பை
உணர்த்திக் கொள்வதற்காக
திடிரென்று
நியமித்துக்கொண்டிருக்கிறது
பண்பாட்டு காவலர்களை
நான் நடந்துகொள்ளவேண்டிய
விதம்பற்றி
விவரணப் படம் எடுக்கப்படுகிறது
கலை இயக்குநரால்
கலைக்காகவே
கலைஞர்களை மட்டுமே நம்பி.
இரத்தங்களை சொட்டும்
வீச்சரிவாள்கள்
அது என் யோனியின் இரத்தம்
என்பதில் பெருமிதம் கொள்கின்றன..
நாளை மருத்துவர்களின்
முயற்சியால் இப்படி கூட நடக்கலாம்
"இலவச யோனி தைப்பு முகாம்"
அன்றைக்கும் கூட சன்னமாய் தான்
ஒலிக்கப்போகிறது
உங்கள் ஆண்குறிகளை கூட
வெட்டிக் கொள்ளலாம் எனும் குரல்.
பத்தவச்ச வத்திக்குச்சி
பக்கத்திலே குளிர்காய்கிறது..
சூரியனுக்கு முன் இதெல்லாம்...
என்றபடி எழுதுகிறது
"எனது அருமை உடன்பிறப்புக்களே".
அப்பாடா
கண்ணுக்கெட்டிய தூரம்வரை
யாருமில்லை
நான் யார் என்பது
தேவையும் இல்லை.