Monday, October 16, 2006

எழுதாத கவிதை

 

கிறுக்கலாய் படுகிறது
எல்லாமே
தோளில் சாய்ந்தபடி
நெஞ்சில் நீ எழுதிய
கவிதைக்கு பிறகு
---------------------------
யாரையோ தேடுவதாய்
தேடிப் பிடிக்கின்றன உன் விழிகள்
நான் பார்ப்பதை
---------------------------
உன் பாரங்களோடு
என் மீது சாய்கிறாய்
மிதக்கிறேன் நான்
---------------------------
பார்க்காத தருணத்தில்
பார்த்துவிட படபடக்கிறது
உன் கண்கள்

உன் பார்வையை
கவ்விவிட காத்திருக்கிறது
என் கண்கள்

இரண்டிற்குமாய்
ஏங்கித் துடிக்கிறது என் இதயம்
--------------------------
யாருக்கும் தெரியாமல்
சந்தித்துக் கொண்ட நம் பார்வைகளை
காட்டிக்கொடுக்கிறது
உன் வெட்கம்
------------------------- Posted by Picasa

4 Comments:

Blogger J S Gnanasekar said...

Third one Super.

1:41 PM  
Blogger ഡാര്‍വിന്‍ said...

Supper Kalvettu..

Kavithai Super!

9:49 AM  
Blogger சேரலாதன் பாலசுப்பிரமணியன் said...

nanRu!

5:29 PM  
Blogger thunku said...

very gud prem...the shattered tsunami is the simply superb.hope u will do best in same way.

2:47 AM  

Post a Comment

<< Home