Thursday, September 15, 2005

கவிதை

அழகாய் தான் இருந்தது
பிறந்த
என் குழந்தை!!
சாயல் மட்டும் வேறாக!?
திருத்தப்பட்ட எனது கவிதை

Wednesday, September 14, 2005

காதல் தோழி

தோழியிடம் சொல்வதற்கென்ன??
தைரியமாய் சொல்லிப்போ
என்னை காதலிப்பதாய்

உன் உணர்ச்சிகளின்
வடிகால் தானே நான்
இதில்
காமத்திற்கு மட்டுமென்ன விதிவிலக்கு!!?

புரியாத இரவுக்கான எதிர்பார்ப்பில்
புரிந்து கொண்டதாக செய்யப்படும்
(திரு)மணங்களில் விருப்பமில்லை
எனக்கு
வா
புரிந்துகொள்வோம்
நம்
தேவைகளை
அறிந்து கொள்வோம்
நம் மனங்களை.

மனிதனை கொன்று
சம்பிரதாயம்
காக்கத் துடிப்பவர்களுக்கான
தண்டனையாய்
தோற்கடிப்போம்
சம்பிரதாயத்தை

(திரு)மணத்தினால் அல்லாமல்
மனத்தினால் பந்தம்
செய்து கொள்வோம்

விரும்பும் வரை

நீ உன் வீட்டிலும் நான்
என் வீட்டிலும்
தங்கிக்கொள்வோம்

உனக்குத் தேவை
என்கிறபோது
நானும்
எனக்குத் தேவை என்கிறபோது
நீயும்
சமரசம் செய்துகொள்வோம்
விருப்பு வெறுப்புகளை
தீர்த்துக் கொள்வோம்
அது இச்சையே ஆனாலும்.

நீ
எனக்காக பேசு..
பெண்ணியம் பேசு
கலவியில் கூட
வேண்டுவன கேள்
என பேசு.

மனைவி தோழியானால்
ஆச்சர்யம்
தோழி மனைவியானால்
அதிர்ஷ்டம்
சொல்லிப்போ
காதலிப்பதாய்

இப்போதும் நான் உன்
தோழி
இப்போது தான் நான்
தோழி
தைரியமாய் சொல்லிப்போ
என்னை காதலிப்பதாய்

Wednesday, September 07, 2005

காணாமல் போனவர் பற்றிய அறிவிப்பு

யாராவது பார்த்தீர்களா?
இரண்டு நாட்களாக காணவில்லை
அவனை
அடையாளம் தானே கேட்கிறீர்கள்!!??

தனக்கான அடையாளத்தை
தேடித் தேடித்தானே
தொலைந்து போனான்
அவன்...!

வாழ்க்கையை
அவன் வாழவில்லை
அவன் வாழ்க்கையை
அவன்
வாழ்ந்ததில்லை!!!

ஒவ்வொரு முறையும்
உயிர்த்தெழுந்ததும்
எதிர்பார்ப்புகளின் சிலுவையில்
அறையப்படுகின்றன
இவன் ஆசைகள்...!

வாழலாம் என நினைத்தபோது
எதிர்பார்ப்புகள் வாழ்ந்திருந்தது
அவன்
நிகழ்காலத்தை!!??

சாவிற்கு பயப்படாத அவன்
வாழ்க்கை..
சாவதற்கு பயந்து
செத்து செத்து வாழ்ந்தது...!!

அவ்வப்போது
நிராகரிப்பும்
அலட்சியங்களும்
கருகலைப்பு செய்கின்றன
இவன் அடையாளங்களை...!!

கருகலைப்பு செய்யப்பட்டதில்
வழிந்த இரத்தத்தை
தானே துடைத்துக் கொண்டிருப்பான்
மெளனம் கொண்டு!!!
யாராவது பார்த்தால் சொல்லுங்களேன்.

- பிரேம்