Tuesday, September 19, 2006

அரசியல்

 

அடியே இந்திரா
நம்ம பொழப்பே நாத்தம் புடிச்ச
பொழப்பா இருக்கு
இதுல இவுக கூத்தக் கேட்டியா!?

சாதிக்க பொறந்தவுக
சாதியவச்சி பிரிச்சிடாதிகன்றாக
அப்படியே
சாக்கடைய அள்ள
அவுக சாதிக்காரவிய எப்ப வாராகன்னு
கேட்டு சொல்லலாமுல்ல

கால் வயித்து கஞ்சிக்கு
வழியில்லனாலும்
மந்திரம் சொல்லி சம்மதிப்பாக
மலம் அள்ள சம்மதிப்பானுவலா

அடியே நீ எதாவது ஆக்கினியா
அரிச்சி அரிச்சி பாத்தாலும்
ஒன்னும் அகப்படலியடி
முந்தா நேத்து வச்ச கஞ்சியில
பருக்ககூட மிஞ்சலயடி

வருசத்துல பாதி நாலு
பட்டினியா கெடந்தாலும்
கேக்க ஒரு நாதியில்ல
ஏதோ
மூணு வேள சாப்பிடலியாம்
மிகப்பெரிய போராட்டமுன்னு
போஸ் கொடுக்குறானுக

எடுபட்ட பயலுக
இத வேற போட்டு போட்டு
காட்டுறானுக
படப்பொட்டியில

இதெல்லாம் காணாதுன்னா
தலித் எழுத்தாளர்ன்னு சொல்றான்
என்னயும் சேத்துக்கன்றானுங்க
அதுசரி
எந்த கக்கூச
எப்ப கழுவ வர்றானுங்கன்னு
எழுதினா நல்லாயிருக்கும்

சரி நமக்கெதுக்கு இதெல்லாம்
வா நம்ம
நம்ம பொழப்ப பாப்போம் Posted by Picasa

0 Comments:

Post a Comment

<< Home