Tuesday, May 30, 2006

தோழி...

  Posted by Picasa

* என் மனதில்
பதட்டத்தில் நிழல் படிந்திருந்த
ஒரு
அழகான தினத்தில்
நீ அறிமுகப்படுத்தப்பட்டாய்.

* பார்க்காமல் விட்டுவிட்டேன்
ஒருவேளை நடந்திருக்கலாம்
மனதை வருடும் மழையோ
இல்லை
வானில் நட்சத்திரமோ
எதோவொன்று உணர்த்திப்போயிருக்கலாம்
எனக்கொரு தோழி கிடைக்கப்போவதை

* என் முகம் சத்தமாகவும்
வார்த்தைகள் ரகசியமாகவும்
சொல்லிப் போகின்றன
என் வலிகளை
உன்னிடம்

* வேதனையின் போது.
சாரலில் எழும்
மண்வாசனை போல்
இதமாய் இருக்கிறது
உன்
நட்பின் வார்த்தைகள்

* என் உள்ளங்கையில்
விழுந்த கண்ணீரில்
தெரிகிறது
உன் நட்பின்
பிம்பம்..

* சந்தோசமாய்
உன் விரல் பிடித்து
சிறுகுழந்தை போல
விளையாடிக்கொண்டே நடக்கிறது
மனது
அருகருகே
நடந்துகொண்டிருக்கிறோம் நாம்

if i leave will u miss me??

* இல்லை என்றால்
நம்பிவிடவும் ஆமாம்
என்றால்
ஒத்துக்கொள்ளவுமா போகிறாய்...

ஆனால் தயவு செய்து
பிரியும் போது
கொஞ்சம்
வலிக்காமல் தான்
பிரிந்து போயேன்
பயமாய் இருக்கிறது...

- பிரேம்

0 Comments:

Post a Comment

<< Home