Monday, March 06, 2006

போகிகள் இனி எழுதலாம் "கல்வெட்டை கண்டுபிடிங்க"

  Posted by Picasa

நிகழ்காலத்தை அடகுவைத்து
உன்னுடனான
கடந்தகாலத்தை மீட்டுக்கொண்டிருக்கிறேன்
நினைவுகளில்!!

திடிரென்று கேட்டதால்
குழம்பிவிட்டேன்
நில்
பார்த்துவிட்டுச் சொல்கிறேன்
என் பெயரை!!

உனைப் பார்த்ததும்
கண்ணில் தெரியும் காதல்
நீ பார்த்ததும்
ஓடி ஒழிந்து கொள்கிறது
மனதில்!!

உன்
கண்ணீர் துளிகள் விழுந்ததில்
சிதறியது
மனது!!

திருவிழாவில்
தொலைந்த குழந்தையாக
தேடி அலைகிறேன்
உன்னை
கடந்துவந்த பாதையில்!!

புதிதாய் வாங்கும்
பேனாக்கள்,
உன் பெயரை எழுதவே
கற்றுக்கொள்கின்றன
முதலில்
நான்
மறந்துவிட்டபோதிலும்

நிராகரிப்புக்கு பயந்து
தற்கொலை செய்துகொண்டது
அதனால் தான் என்னவோ
உனை சுற்றியே
அலைந்து கொண்டிருக்கிறது
காதல்

ஏனென்று கேட்காமல்
உயில் எழுதிவை
நான் கொண்டுவரும் தாளில்தான்
சிதை மூட்டவேண்டுமென்று
கொண்டுவருகிறேன்
உனக்கான கவிதைகளை

- பிரேம்