Wednesday, July 27, 2005

கவிதையும் போராட்டமும்

நிராகரித்து விடுங்கள்
என் கவிதையை
அழக்கூட முடியாத
ஆற்றாமையின் வெளிப்பாடுதானே
அது!!??

கவிதை மட்டும்தான்
காயப்பட்டுப் போகிறது
என் கண்ணீரின்
ஈரத்தில்....

அதன் காயங்கள்
சொல்லிப்போகும்
நிராகரிப்பின்
வேதனையை

கவிதையும் போராட்டமும்
ஒன்றுதான்
போராடுபவர்களுக்கு
புரியும்
அதன் நியாய அநியாயங்கள்

"வந்தால் மலை போனால்
மயிர்"
என்று சொல்வதற்கு
பணயம் வைக்கப்படுவது
மயிர் அல்ல
உயிர்

அதுசரி
அடுத்தவன் உயிர்
உங்களுக்கு மயிர் தானே!!

பாவம் நீங்கள் என்ன செய்வீர்கள்
மனிதனாக பிறந்தது
உங்கள் குற்றமா என்ன???

ஒடித்துப்போடுங்கள்
உங்கள் தராசின் முட்களை

போதையில் ஆடும் அதன்
ஆட்டத்தின் முடிவை
எதிர்பார்த்தில்லை
போராட்டமும்
என் கவிதையும்.

1 Comments:

Blogger Balaji-Paari said...

//ஒடித்துப்போடுங்கள்
உங்கள் தராசின் முட்களை

போதையில் ஆடும் அதன்
ஆட்டத்தின் முடிவை
எதிர்பார்த்தில்லை
போராட்டமும்
என் கவிதையும்//

Nalla varigal.
:)

12:25 AM  

Post a Comment

<< Home