Wednesday, July 27, 2005

யார்....? யாருக்காக....!!???

ஏன்
எதற்கு
எப்படி
என்று கேட்டுக்கொண்டே போகலாம்!!
இருந்தாலும் தெளிவாக சொல்லமுடிந்ததில்லை
நம் பிரிவுக்கான காரணத்தை!!!

பல நாட்களாக கண்ணீர் பட்டும்
கரையாமலே இருந்தது
எதிர்பார்ப்புகளினால் ஏற்பட்ட
ஏமாற்றத்தின் கசப்பு....!!!

சந்தோசமோ
துக்கமோ
கவிதையாகவே பார்த்திருக்கின்றன
என் இரவுகள்,
கண்ணீரை.

அன்றைக்கு உனக்காக!!
நீ பார்த்த துளிகள்,
கரையாகவே படிந்துபோனது
என் மனதில்!!

கற்பனைக் கற்கள்,
எதிர்பார்ப்புகளோடு
நட்பையும்
உடைத்துப் போனதை
என்னவென்று சொல்வது!!??

உடைந்த பிம்பங்கள்
உணர்த்திப் போகும்
கண்ணாடிகள் உடைந்துபோனதை
அதைப் போலத்தான்
என் மெளனமும்...!!!

பட்டகாயத்தின் வடுக்களை
பார்க்கமுடியாமல்
முகமுடியே
முகமாகிப்போனது!!!

நீ வாழ்த்து சொல்லியபோது
முகத்தை திருப்பிக் கொண்டிருக்கலாம்
முகம் பார்க்கும் ஆசை
என்னையும் மீறி
என்னையறியாமல் வெளிப்பட்டுப்போகிறது!!

கண்டும்காணாமல் போவதும்
கேட்குமெனத் தெரிந்தே
கோபமாகப் பேசுவதும்
உன் பிரிவின் காயத்தை
மறைக்கத்தானே!!!

இது
கவிதையாகவே இருக்கட்டும்
இல்லை என்றாலும்

கேட்காதீர்கள்
யார்
யாருக்காக எழுதியதென்று!!!??

2 Comments:

Anonymous Anonymous said...

Really Nice...
Idhuvarai Yenakku Idhu Nigazhdhathillai...
Padiththa Piragey Purindhu Konden!
Yaaro Yaarukkaaga Yendru...
--> Madhusudhan <--, NITT, Civil

3:40 PM  
Blogger செல்வேந்திரன் said...

feelings aa maamu..killappu killapu !!

8:16 PM  

Post a Comment

<< Home